Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Friday, April 24, 2009


உருகும் பனியின் ஓர் துளியாய்,
உறங்கும் ஒளியாய் நீ இருந்தாய்.
இரவின் மேகம் இறந்தது போல்,
இறுகும் தனிமையில் நான் இருந்தேன்.

உதிரும் உலகின் ஆழங்களில்
தொடக்கம் காணும் முடிவுகள் போல்,
இருமை இருப்பதும் அறியாமல்,
அடர்வெண்ணிழலாய் நாம் இருந்தோம்.